தூத்துக்குடி செய்தியாளர்களின் தாய் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்கள்!!!

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து மற்றும் வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைச் செயலாளர் உத்திரபாண்டி ஆகியோரின் தாயும், செய்தியாளர் ரேகா-வின் மாமியாருமான த.சின்னத்தாய் அம்மாள் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிதம்பரநகாில் உள்ள நியூ பாசக்கரங்கள் முதியோா் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அவரது மகள் மல்லிகா, மகன் கனகராஜ், மகள் ஜெயலெட்சுமி, மருமகன்கள் மாசிலாமணி, அஜய்கோஷ், மருமகள்கள் இலங்கைரதி, பிரேமா, ஹேமா ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மகன்கள், மகள்கள், மருமகள்கள், மருமகன்கள், பேரன்கள், பேத்திகள் உள்பட குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article