உடுமலையில் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழப்பு!!!

திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூத்து என்ற கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை சேர்ந்த தங்கப்பாண்டியன் (32) தனது மனைவி, மகன், மகள் மற்றும் தந்தை மூர்த்தி (65) ஆகியோருடன் தோட்டத்து வீட்டில் தங்கி பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவில் தந்தை, இரு மகன்களுக்கிடையே குடிபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இதில் மணிகண்டன் தந்தை மூர்த்தியை சரமாரியாக தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் குடிமங்கலம் காவல்துறைக்கு போனில் தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல் நிலையத்தில் இருந்து நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் (58)க்கு தகவல் தெரிவித்தனர்.

Share This Article