ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைய வேந்தர் பேரவை சார்பில் மகளிர் விழிப்புணர்வு கூட்டம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் இளைய வேந்தர் பேரவை தலைவர் சேவரத்னா டாக்டர் த. ஆனந்த முருகன் பங்கேற்பு : அயல்நாடுவாழ் இந்தியர்கள் ஒருங்கிணைப்பு செயலாளர்கள் சோபா, பாரிஸ் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைய வேந்தர் பேரவை சார்பில் மகளிர் விழிப்புணர்வு கூட்டம், மரக்கன்று நடுதல்  உள்ளிட்ட  பல்வேறு நிகழ்ச்சியில் இளைய வேந்தர் பேரவை தலைவர் சேவரத்னா டாக்டர் த. ஆனந்த முருகன் பங்கேற்பு : அயல்நாடுவாழ் இந்தியர்கள் ஒருங்கிணைப்பு செயலாளர்கள் சோபா, பாரிஸ் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு!!

ராமேஸ்வரம்,ஜன, 27

இளைய வேந்தர் பேரவை சார்பாக அயல்நாடுவாழ் இந்தியர்கள் ஒருங்கிணைப்பு செயலாளர் சோபா, தலைமையில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தொகுதியில், பல்வேறு நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த சேவரத்னா டாக்டர் த. ஆனந்த முருகன் அவர்களுக்கு மிக சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வகையில், திருவாடனை தொகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆதிரத்தினேஸ்வர் ஆலயத்தில் சேவரத்னா தலைவர் டாக்டர் த. ஆனந்த முருகன் அவர்களுக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டு, பக்தி, பண்பு பாரம்பரியம் ஆகியவற்றை போற்றும் வகையில் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அதே சேவை பயணத்தின் தொடர்ச்சியாக திருவாடனை தொகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுப்பையும், எதிர்கால தலைமுறையின் நலனையும் கருத்தில் கொண்டு சேவரத்னா டாக்டர். ஆனந்த முருகன் மரக்கன்றை நட்டு வைத்து சமூக சேவையின் இன்னொரு உயர்ந்த அத்தியாயத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இளைய வேந்தர் பேரவை சார்பில் மகளிர் விழிப்புணர்வு கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேற்கண்டஇந்த முழு சேவை  நிகழ்வுகளிலும் இளைய வேந்தர் பேரவையின் அர்ப்பணிப்பு மிக்க தோழர்களான மாநில அமைப்பு செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜி புஷ்பராணி, மாநில அமைப்புச் செயலாளர் பள்ளிக்கரணை சந்திர சேகர், சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். இளைய வேந்தர் பேரவை தலைவர் ஆனந்த முருகன் அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் அயல்நாடுவாழ் இந்தியர்கள் ஒருங்கிணைப்பு நிர்வாகி பாரிஸ், சோபா ஆகியோர் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி செய்துள்ளனர்.

Share This Article