தூத்துக்குடியில் எஸ் ஐ ஆர் பணியில் திமுகவினர் தலையீடு?? மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தவெக நிர்வாகி ஆனந்தகுமார் கோரிக்கை!!!

Police seithi - 1
தூத்துக்குடி., நவ, 17
தூத்துக்குடியில் தவெக நிர்வாகியும், முன்னாள் கவுன்சிலருமான ஆனந்தகுமார் எஸ்.ஐ.ஆர். பணியில் திமுகவினர் தலையீடு குறித்து நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
வாக்காளர் சுருக்கப் பணியில் (எஸ்.ஐ.ஆர்) திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில்  தவெக நிர்வாகியும், முன்னாள் கவுன்சிலருமான ஆனந்தகுமார் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார்  இது  தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தவெக-வினரின் குற்றச்சாட்டு என்ன?
பிஎல்ஓ-க்கள் தான் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று விண்ணப்பத்தைக் கொடுத்து, அதை பூர்த்தி செய்து வாங்க வேண்டும். ஆனால், பல இடங்களில் இது சரியாக நடைபெறவில்லை என்றும், குறிப்பிட்ட சில இடங்களில் திமுகவினர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மொத்தமாக விண்ணப்பங்களை வாங்கி, வீடு வீடாகச் சென்று வழங்குவதாகவும் தவெகவினர் குற்றம் சாட்டினர். குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்: 23, முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளில் சுமார் 5500-க்கும் மேற்பட்டவர்கள்  பழைய வாக்காளர் பட்டியலில் உள்ளனர். இந்நிலையில் அதில் சுமார் 2500 வாக்காளர்கள், வார்டு பகுதியிலிருந்து வெளியே சென்றவர்கள் உள்ளார்கள். ஆனால் பிஎல்ஓ, பிஎல்ஓ2, போன்ற அதிகாரிகளை தூத்துக்குடி  முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் அரசியல் கட்சியனர் தாங்கள் சொல்லும் நபர்களுக்கு படிவங்களை வழங்க வேண்டும் எனவும், வெளியே சென்றவர்களுக்கும் இதே பகுதியில் வாக்காளர்களாக அங்கீகரிக்கும் பணியும் நடைபெறுகிறது. உதாரணத்திற்கு  முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவில் முன்பு இரவு நேரங்களில்  வட்டமாக நாற்காலியில்  அமர்ந்து கொண்டு ஆளும் கட்சியினர்கள் மற்றும்  சிலர் மற்றும் வாக்காளர் திருத்த பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள்   வார்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வீடு வீடாகச் சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ளாமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பொதுமக்களை அலைக்கழிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் ஆளுங்கட்சியினர் தெரிவிக்கும் நபர்களுக்கு வார்டு பகுதியில் இருந்து வெளியே சென்றவர்களுக்கு   இந்த பகுதியில் தான் குடியிருந்து வருவதாக படிவங்கள் நிரப்பப்பட்டு  அதிகாரிகளால் பெறப்படுகிறது.
இதனை மாவட்ட ஆட்சியர் தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற தவறுகள் எங்கும் நடக்கக்கூடாது என்று வலியுறுத்த  வேண்டுமென   தெரிவித்தார்.
எஸ்.ஐ.ஆர் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கனவு என்றும், வாக்காளர்கள் இரட்டைப் பதிவு, வெளியூர் சென்றவர்கள், இறந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம் என்றும் அவர்கள் விளக்கினர். ஆனால், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இதனை எதிர்த்து, எஸ் ஐ ஆர்  தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்   என்றும் தகெவினர் குற்றம் சாட்டினர்.  வாக்குச்சாவடி  நிலை அலுவலர்கள்  தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் பகுதியில்  வீடு வீடாக சென்று வெளியூர் வாக்காளர்களை நீக்க முன்வர வேண்டும் எனவும்  அரசியல் தலையீடுகளுக்கு உடன்படாமல்  செயல்பட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் செய்ய வேண்டும் எனவும்  தவெக நிர்வாகியும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான  ஆனந்தகுமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்திற்கு  கோரிக்கை முன்வைத்துள்ளார். எஸ் ஐ ஆர் கண்டித்து  தமிழக வெற்றி கழகம் சார்பில்  சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்
வாக்குச்சாவடி  நிலை அலுவலர்கள்  சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்  ஆளுங்கட்சியினர்  தலையீடு இல்லாமல் எஸ் ஐ ஆர்  பணி நேர்மையாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பது குறித்து  பல்வேறு நிர்வாகிகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தவெக நிர்வாகியும்  முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ஆனந்தகுமார்  கோரிக்கை வைத்துள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share This Article